எனது வாசிப்பு!
மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.
மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:
1. Long walk to freedom – Nelson Mandela
2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்
3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்
4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)
5. ஆதிரை – சயந்தன்
6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி
7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா
எல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.
அடுத்து வாசிக்க இருப்பது> The Monk who sold his Ferrari By Robin Sharma
மறுமொழியொன்றை இடுங்கள்