Category Archives: நிகழ்வுகள்

இயக்குநர் சேரனுடன்!

ஒஸ்லோவில் நடந்த தமிழ்த் திரைப்பட விழாவுக்கு வந்த இயக்குநர் சேரன் குடும்பத்தினர் நம்ம மழை நகரம் பேர்கனையும் பார்க்க வந்தார்கள். தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன் எங்களுடன் தங்கியதில் மகிழ்ச்சி. என்ன ஆச்சரியம், அவர்கள் வந்து நின்ற இரு நாட்களும் பேர்கனில் மழையே இல்லை . அதனால் அவர்களையும் கூட்டிக் கொண்டு பேர்கன் சுற்றிப் … Continue reading

Posted in திரைப்படங்கள், நிகழ்வுகள், நினைவில்.. | Tagged , , | 2 மறுமொழிகள்

அழகோ அழகு!

இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக … Continue reading

Posted in அழகு, நிகழ்வுகள், நோர்வே, படங்கள், uncategorized | 1 மறுமொழி

என் செல்லக் குட்டிம்மா!

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை. அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 … Continue reading

Posted in அன்பு, உணர்வுகள், கவிதை, குழந்தை, சிந்தனை, நிகழ்வுகள், நினைவில்.., பாசம், human nature, Kids world, life | 10 மறுமொழிகள்

இன்றைய கனவு!

வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் … Continue reading

Posted in இலங்கை, உணர்வுகள், உலகம், கனவு, சமூகம், சோகம், நிகழ்வுகள், uncategorized | 5 மறுமொழிகள்

என்னோடு பாட்டு பாடுங்கள்!

எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு. ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு … Continue reading

Posted in நிகழ்வுகள், ரசித்தவை | மறுமொழியவும்