Category Archives: கிறுக்கியவை

மழையில் கண்ணீர்!!

மழையில் கண்ணீர்!! அன்று அவன் சொன்னான்… ஒரு குடைக்குள் நீயும் நானும் இணைந்திருக்கும் நிமிடங்களின் நினைவுகள் மனதினில் நீங்காமல் என்றும் நிறைந்திருக்கும்….. இன்று அவள் சொல்கிறாள்… நனைந்திருந்த நிமிடங்கள் பாரமாய் நெஞ்சினிலே பிரிந்துவிட்டோம் என்பதனால்… குடை பிடிக்க இஷ்டமில்லை… கன்னத்தில் காய்ந்த கண்ணீர் கரையட்டும் மழை நீரில்….

Posted in காதல், கிறுக்கியவை | 13 மறுமொழிகள்

ஊமை உள்ளம்!!

உதடுகள்தான் சொன்னது, உன்னை மறந்து விட்டேனென்று… உணர்வுகள் அதை மறுத்தும், உள்ளம் ஊமையானது…. கண்மூடி இருக்கையிலே, கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரில்தான் புரிகிறது.. காதலின் தவிப்பும், இந்த காயத்தின் வலியும்….

Posted in காதல், கிறுக்கியவை | 3 மறுமொழிகள்

முயற்சி செய்!!

ஒளி தெரியும் வானமது தொலைவில்தான் ஆனாலும் வானத்தை, தொட்டு விட முயற்சி செய்… எழில் மிகுந்த மலைமுகடும் உயரத்தில்தான் ஆனாலும் உச்சியை, எட்டிவிட முயற்சி செய்…

Posted in கிறுக்கியவை, சிந்தனை, வாழ்க்கை | 6 மறுமொழிகள்

தடையங்கள்!!!

கடலோர புதை மணலில் அதோ சிலகால் சுவடுகள்,பெண் அவள் மனதில்அவன் விட்டுப் போனபாரமானதடையங்கள் அழியாமல்,ஆரவாரமாய் எழப்போகும்கடல் நீர்அழித்துவிடும்கால் சுவடுகளை,ஆனால் அவள் நெஞ்சின் தடையங்கள்அழியுமா இவ்வாழ்வில்???

Posted in காதல், கிறுக்கியவை | 5 மறுமொழிகள்

உன் கை பிடித்து……

உன் கை பிடித்து நான் எழுந்து என் முதலடியை எடுத்து வைத்தேன் உன் கைகள் எந்தனுக்குசெய்துவிட்ட சேவைகளோ ஏராளம் விளையாடிக் களைத்து நான் வியர்வையில் குளித்து வந்தால் முந்தானை எடுத்து என் முகம் துடைத்தாய்மழையில் நனைந்து வந்தால் மார்பில் சளி பிடிக்குமென்று தாயே நீ ஓடி வந்து தலை துடைத்தாய்நான் விரும்பும் இடமெல்லாம் நாளும் நீ … Continue reading

Posted in கிறுக்கியவை, பாசம் | 1 மறுமொழி