Category Archives: காதல்

மழையில் கண்ணீர்!!

மழையில் கண்ணீர்!! அன்று அவன் சொன்னான்… ஒரு குடைக்குள் நீயும் நானும் இணைந்திருக்கும் நிமிடங்களின் நினைவுகள் மனதினில் நீங்காமல் என்றும் நிறைந்திருக்கும்….. இன்று அவள் சொல்கிறாள்… நனைந்திருந்த நிமிடங்கள் பாரமாய் நெஞ்சினிலே பிரிந்துவிட்டோம் என்பதனால்… குடை பிடிக்க இஷ்டமில்லை… கன்னத்தில் காய்ந்த கண்ணீர் கரையட்டும் மழை நீரில்….

Posted in காதல், கிறுக்கியவை | 13 மறுமொழிகள்

ஊமை உள்ளம்!!

உதடுகள்தான் சொன்னது, உன்னை மறந்து விட்டேனென்று… உணர்வுகள் அதை மறுத்தும், உள்ளம் ஊமையானது…. கண்மூடி இருக்கையிலே, கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரில்தான் புரிகிறது.. காதலின் தவிப்பும், இந்த காயத்தின் வலியும்….

Posted in காதல், கிறுக்கியவை | 3 மறுமொழிகள்

தடையங்கள்!!!

கடலோர புதை மணலில் அதோ சிலகால் சுவடுகள்,பெண் அவள் மனதில்அவன் விட்டுப் போனபாரமானதடையங்கள் அழியாமல்,ஆரவாரமாய் எழப்போகும்கடல் நீர்அழித்துவிடும்கால் சுவடுகளை,ஆனால் அவள் நெஞ்சின் தடையங்கள்அழியுமா இவ்வாழ்வில்???

Posted in காதல், கிறுக்கியவை | 5 மறுமொழிகள்

தேடல்!

அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை. தேடல்! மீண்டும் பிரம்மச்சாரி ஊர் கேட்க கத்தினேன் நீ உன் பிறந்தகம் போன அந்தக் கணத்தில் உன் உத்தரவில்லா உலகத்துள் என் ஒருத்தனின் ராஜாங்கம் தாமதமாய் விடியல் பல் துலக்காமல் தேநீர் ஆஷ் டிரேக்கு வெளியே அணையாத சிகரெட் துண்டு நண்பர்கள் மதுக்கோப்பை இறைச்சியின் எச்சம் எல்லாமே … Continue reading

Posted in கவிதை, காதல், ரசித்தவை | 3 மறுமொழிகள்

இழப்பு!!!!!!!

இழப்பு!!!!!!! உறவினை இழக்கையில், உள்ளம் உறங்கிப் போகும்…… உணர்வுகளின் கொந்தளிப்பில், உதடுகள் கூட ஊமையாகிடும்…… நெஞ்சுக் குழிக்குள்ளே, நிஜங்களைத் தொலைத்துவிட்ட நினைவுப் போராட்டம்…. நிழலாய் தொடரும்….. கனவுகளும் கூட, கற்பனைகள் இல்லாமல், கலங்கிப்போய், கண் மூடி கிடக்கும்…. கண்களில் கண்ணீரும், காய்ந்து போய் விடும்…… இரவுகளுக்கும், பகல்களுக்கும், இடைவெளியே இல்லை, இரவிலும் உறக்கமில்லை, இருளே பகலிலுமாய், … Continue reading

Posted in காதல், கிறுக்கியவை, பாசம், வாழ்க்கை | 2 மறுமொழிகள்