உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

  • பிரிவுகள்!

  • பழையவை!

  • நாட்காட்டி!

    நவம்பர் 2007
    தி செ பு வி வெ ஞா
    « அக்   டிச »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
  • அண்மையில்....

  • சொல்லிச் சென்றவை...

    ராமலக்… மேல் என் குட்டி…
    Premkumar மேல் என் குட்டி…
    கலை மேல் பெண்கள் vs …
    சேவியர… மேல் பெண்கள் vs …
    சினேகி… மேல் என் குட்டி…

என் குட்டி சினேகிதி!

பதிந்தவர் கலை மேல் நவம்பர் 26, 2007

என் பிரியமான குட்டி சினேகிதி!

நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.

இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது. :)
bestfriends.jpg

ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது. :)

bestfrineds1.jpg

:) எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

3 பதில்கள் -க்கு “என் குட்டி சினேகிதி!”

  1. சினேகிதி கூறுகிறார்:

    ahhh that’s so cute :-))) உங்கட மகளா அந்தத் தேவதை?

  2. Premkumar கூறுகிறார்:

    வலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி சேர்க்கப்பட்டது
    http://blogintamil.blogspot.com/2008/06/blog-post_19.html

  3. ராமலக்ஷ்மி கூறுகிறார்:

    வலைச்சரம் சுட்டிய வழியில் வந்தேன்.
    மழலை மனது மல்லிகைப் பூ போன்றது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>